நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை.
பாகிஸ்தான் நாட்டில் மூன்று அமைப்புகள் சம பலத்துடன் இருக்கும். அது, இராணுவத் துறை, நீதித் துறை, உளவுத்துறை அத்துடன் பிரதமர்.
கடைசியா இருந்த எந்தப் பிரதமரும் அங்கு நிலையாக இருந்தது இல்லை.
- பெனாசீர் பூட்டோ தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டார்
- முஷ்ரப் துபாயில் இருக்கிறார் (தலைமறைவாக)
- கடைசியாக நவாப் ஷரிப் நீதித் துறையினால் சிறையில் உள்ளார்.
இப்படி அங்கு இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு விதத்தில் இந்த மூன்று அமைப்புகளால் பாதிப்பு ஏற்படும் அல்லது தண்டிக்கபடுவார்கள்.
பாகிஸ்தானில் நாட்டில் அரசியலில் இருப்பவர்கள், இந்தியாவை எதிர்த்துதே அவர்களின் அரசியல் கொள்கையை வகுத்துக்கொள்வார்கள். அப்படி இருந்தால் தான் அவர்களால் அங்கு அரசியல் பண்ணமுடியும். எப்படி, இலங்கையில் தமிழர்களை எதிர்த்தால் தான் அரசியல் பண்ணமுடியுமோ அதைப்போன்று.
மாறுபட்ட அரசியலை கொடுக்காவிட்டாலும், குறைந்தது நீங்களாவது, உங்கள் நாட்டின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.