தொடரும் பாலியல் தொல்லைகள் …

14-Nov-2021 சில வருடங்களாக பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்களினால் பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. இதில், பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சில தினங்களுக்கு முன், கோவையில் 12-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த குழந்தையை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறான் ஆசிரியர் என்கின்ற போர்வையில் மிதுன் சக்ரவர்த்தி என்கின்ற கொடூரன். கடந்த ஆறு மாசமா என் பிள்ளைக்கு அந்த ஆசிரியரால் தொல்லை இருந்திருக்கு. நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம். பஸ்ல போகும்போது ரெண்டு பேர் இடிச்ச மாதிரி நெனச்சிக்கிட்டு விட்டுடுங்க. பெரிதுபடுத்தினா, உங்க பேரும் கெடும்னு சொல்லி பள்ளி நிர்வாகம் எந்த … Continue reading தொடரும் பாலியல் தொல்லைகள் …

வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

21-10-2021 அரசியலில் வாரிசுக்கு என்ன வேலை என்று தன்னுடைய கடும் எதிர்ப்பை திமுகவின் அன்றைய தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் காட்டிவிட்டு, மதிமுக என்கின்ற கட்சியை உருவாக்கினார் வைகோ. ஆனால் இன்று மதிமுகாவும் வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் வாரிசுக்கு கட்சியில் பதவி தருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதனை வைகோ அவர்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார். தன் மகன் துரை அவர்களுக்கு மதிமுகவின் முக்கியப் பதவியான தலைமைக் கழகசெயலாளர் என்கின்ற பதவியை கொடுத்ததின் மூலமாக தானும் வாரிசு அரசியலுக்கு எதிரி இல்லை என்று இந்த உலகுக்கு … Continue reading வாரிசு அரசியலுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் வைகோ

மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

காட்டில் இருக்கும் புலியை (T-23) சுட்டு பிடிக்க (வேட்டையாட) உத்தரவு நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் குரங்குகள் அதிகமாக இருந்தால் அதனை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, அவைகளை பிடித்து அருகேயுள்ள காட்டில் விடுகிறோம். ஏன் என்றால்? நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் காட்டில் வசிக்க வேண்டிய விலங்குகளுக்கு என்ன வேலை என்பதினால். இதனையே காட்டில் வசிக்கும் விலங்குகள் நம்மிடம் கேட்டால், நம்மிடம் பதில் இல்லை. விலங்குகள் மற்றும் பூர்வகுடிகள் வசிக்கும் இடம் காடு. (காடுகளிலும், அங்கிருக்கும் விலங்குடனனும் எப்படி வாழ்வது என்பது பூர்வகுடிகளுக்கு தெரியும்). காடுகளில் மக்களாகிய நமக்கு என்ன … Continue reading மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த 10 அறிவிப்புகள்

செப்டம்பர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்அறிவித்தவைகளில் மிகவும் முக்கியமானவைகள் தந்தை பெரியாரின் பிறந்தநாள் – சமூகநீதி நாள் தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்! பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் களங்கண்ட துறைகளிலெல்லாம் வெற்றி!சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி!நவீன தமிழ்நாட்டின் சிற்பி!அரைநூற்றாண்டுகாலத் தலைப்புச்செய்தி!என்றும் அண்ணாவின் அன்புத்தம்பி!வரலாறாக வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞருக்கு … Continue reading வரலாற்றுச் சிறப்புவாய்ந்த 10 அறிவிப்புகள்

டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

21/03/2021 புதுச்சேரி அரசியலில் கட்சியைவிட வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. கட்சி அவர்களி்ன் வெற்றியை மேலும் உறுதி செய்யும் அவ்வளவுதான் கட்சியின் வேலை. இதுதான் தமிழ்நாட்டு அரசியலுக்கும், புதுச்சேரி அரசியலுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். குறிப்பிட்ட தொகுதி வேண்டும் என்பதற்காக, அந்த தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏகள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார்கள், இருந்தும் அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏவாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் … Continue reading டி.பி.ஆர். செல்வம் – பழைய வரலாறு மீண்டும் வரும்

கொரோனாவினால் ஏற்பட்ட நன்மைகள்

2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் வாட்டி வதைத்தது என்று சொல்லலாம். பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிய காலகட்டம். இப்படி பல துன்பங்கள் இருந்தாலும், ஒரு சில (விரல் விட்டு என்னும் அளவுக்கு) நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் பார்வையில், முக்கிய நன்மைகள். இயற்கை மருந்தை ஊக்குவித்தது (வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக மாற்றியது) இந்த நவீன காலகட்டத்தில் நம் முன்னோர்களின் வழிமுறைகளை பலவற்றை மறந்து இருக்கிறோம் அவற்றில் முதன்மையான ஒன்று … Continue reading கொரோனாவினால் ஏற்பட்ட நன்மைகள்

ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது கட்சி தொடங்குவது உறுதி என்றும், எப்போழுது கட்சியை தொடங்கப்படும் என்று சொல்வதற்கு தேதி குறித்திருக்கிறார் ரஜினிகாந்த். பல தயக்கங்களை கடந்து இப்போழுது அரசியலுக்கு வரும் அறிக்கையை கொடுத்துள்ளார். அனேகமாக அனைவரும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில், நடிகர் ரஜினியின் அரசியல் பேச்சுக்கள், தன்னுடைய படங்களி்ன் வியாபாரத்திற்கு பயன்பட்டது, ஆனால் அரசியல்வாதி ரஜினியின் நடவடிக்கைகள் இனி எப்படி, யாருக்கு பயன்படும் என்பதை ஜனவரி … Continue reading ரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா? அல்லது சிவாஜி பாதையா?…

தலைமை பண்புகளுக்கு எடுத்துக்காட்டு – ஆசிரியர் குணசேகரன்

நேர்பட பேசு, காலத்தின் குரல் என்கின்ற விவாத மேடைகளை தன்னுடைய தனித் திறமையினால் தொலைக்காட்சி விவாத மேடைக்கு என்று ஒரு தரத்தை கொடுத்தவர் குணா என்கின்ற குணசேகரன் அவர்கள். அவருடைய நேர்படப்பேச்சும் மற்றும் காலத்திற்கான சமூக அக்கறை இந்த இரண்டும் தான் பொது மக்களாகிய நமக்கு அவருடான நெருக்கத்தை அதிகமாக்கியது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் அவரை சார்ந்தவர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும், அவருடைய தலைமைப் பண்புகளை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மேற்பார்வையில் வளர்ந்த நிறுவனம் அவரை வெளியேற்றியதா அல்லது அவரே வெளியேறினாரா என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். … Continue reading தலைமை பண்புகளுக்கு எடுத்துக்காட்டு – ஆசிரியர் குணசேகரன்

நாவல் மரம்

எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாவல் மரம். பசுமையான தோற்றத்தில் இருந்த மரம். இன்று அதன் கிளைகளை இழந்து காட்சி தருகிறது. காலை எழுந்தவுடன், இந்த மரத்தில் இருந்த நாவல் பழங்களை ரசித்து உண்ணும் அணில்களை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இன்று அந்த காட்சிகளை பார்க்க முடியவில்லை. இனி அந்த காட்சியை பார்க்க சில வருடங்கள் ஆகும். தாஜூதீன் Continue reading நாவல் மரம்

தேர்தல் வருகிறது – நில் கவனி செல்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அநேகமாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. பல மாடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் அனைத்துக் கட்சிக்கும் மிகவும் சவாலாக இருக்கும். அதுவும் இந்த தேர்தல் மதம், ஜாதி மற்றும் வெறுப்பு உணர்வுகளை மையமாக வைத்து நடக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் நன்றாக தெரிகிறது என்பதுதான் உண்மை. அண்மையில், செய்தி ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என்பது மிகவும் கவனமாக அதே சமயத்தில் தெளிவான திட்டமிடல் இருக்கும் என்பதுதான் அனைவரது கருத்து. அவர்களின் மீது ஒரு கட்சியின் சார்பு … Continue reading தேர்தல் வருகிறது – நில் கவனி செல்